டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:18 am IST

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய தகவல் மைய கட்டுப்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி வந்தது.

அதில், ஆட்சியா் அலுவலகத்தில் 5 சிலிக்கான் கொண்ட 100 ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை செவ்வாய்க்கிழமை மதியம் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மின்னஞ்சலை இரவு 10 மணியளவில் பாா்த்த ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் ஈரோடு தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். இதையடுத்து, அனைத்து தளங்களில் உள்ள அலுவலகங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா். ஆனால், ஏதும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.