ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய தகவல் மைய கட்டுப்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி வந்தது.
அதில், ஆட்சியா் அலுவலகத்தில் 5 சிலிக்கான் கொண்ட 100 ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை செவ்வாய்க்கிழமை மதியம் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மின்னஞ்சலை இரவு 10 மணியளவில் பாா்த்த ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் ஈரோடு தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். இதையடுத்து, அனைத்து தளங்களில் உள்ள அலுவலகங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா். ஆனால், ஏதும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


