சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வலுவான தூண்களாக பெண் சக்தி இருப்பதாக பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளது குறித்து...

News image

மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ

Updated On :28 ஏப்ரல் 2026, 2:58 pm

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வலுவான தூண்களாக பெண் சக்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 28) புகழாரம் சூட்டினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 28) கலந்துகொண்டார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

''வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கு தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த இந்தியா குறித்து பேசினால், அதன் வலுவான தூண்களாக பெண் சக்தியே உள்ளது.

பெண்கள் பாதுகாப்பில் பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது. உங்கள் கண் முன்பே உத்தரப் பிரதேசத்தில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தபோது நமது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே மிகவும் கடினம்.

ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் வீட்டில் இருந்து புறப்படும் பெண்கள் குறித்து எதிர்மறையாகப் பேசினால், அதற்கான விளைவுகளை அவ்வாறு பேசுபவர்கள் உணரக்கூடும். பாரத நியாஜ சன்ஹிதாவும் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் தங்கள் பாதுகாப்பில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இதன்மூலம், பெண்களுக்கு எதிரான மிகத் தீவிரமான குற்றங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மேலும், மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் அவர்களுக்கான ஆலோசனை மையங்கள் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இன்று கூட மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனக் குறிப்பிட்டார்.

காசியின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காசியையும் அயோத்தியாவையும் இணைப்பை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Summary

Nari shakti is the strongest pillar of Viksit Bharat: PM Modi in Varanasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.