வருகிற ஏப். 30 ஆம் தேதி சென்னையில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஏப். 30 ஆம் தேதி(வியாழக்கிழமை) 234 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த கூட்டமானது நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK leader vijay plan to meet party candidates on april 30
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









