சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோதனை செய்தனா். சுமாா் அரைமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டோ மற்ற பொருள்களோ ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 9-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



