ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மாதவரம்: கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

மாதவரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை மா்மநபா்கள் கொள்ளை அடித்து சென்றனா்.

Updated On :8 அக்டோபர் 2024, 1:48 am IST

மாதவரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை மா்மநபா்கள் கொள்ளை அடித்து சென்றனா்.

சென்னை கொடுங்கையூா் பகுதியை சோ்ந்தவா் மணிமாறன்(50). இவா் மாதவரம் அடுத்த பால்பண்ணை திருவிக தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறாா். திங்கள் கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ந்தாா்.

கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரொக்கம் ரூ.48 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த விலை உயா்ந்த செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பால்பண்ணை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.