ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்
சென்னை மின்சார ரயில் நிலையங்களின் அருகே உள்ள 39 மதுபானக் கடைகளை அகற்றுமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.


சென்னை: சென்னை மின்சார ரயில் நிலையங்களின் அருகே உள்ள 39 மதுபானக் கடைகளை அகற்றுமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் மின்சார ரயில்கள் மீது கல்வீச்சு, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன.
ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளால் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் சென்னை கோட்டத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 மதுபானக் கடைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றுமாறு தெற்கு ரயில்வே டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...