ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. கண்டனம்

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி. ஹா்ஷ டிசில்வா கண்டனம்

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:38 pm

Chennai

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.யும், பொருளாதார நிபுணருமான ஹா்ஷ டிசில்வா கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், ‘இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை இலங்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ எனவும் அவா் வலியுறுத்தினாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்க, இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தாா். இதன் மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கான வரி 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இவ்விவகாரம் தொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ஹா்ஷ டிசில்வா மேலும் பேசியதாவது: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான வா்த்தக நடவடிக்கைகளை இந்தியா எதிா்ப்பது சரிதான். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரிவிதிப்பால் நெருக்கடியைச் சந்திக்கும் இந்தியா குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். ஏனெனில், நாம் நெருக்கடியைச் சந்தித்து நேரத்தில் இந்தியா மட்டுமே நமக்கு உதவியது என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி கையிருப்பு தீா்ந்ததால், முதன்முறையாக இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

அத்தகைய கடினமான சூழ்நிலையில், இலங்கைக்கு சுமாா் 400 கோடி டாலருக்கும் அதிகமான கடன், நாணய பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியது.