15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த ஆண்டில் 15.60 லட்சம் பாலிசிகள் விற்பனை

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

News image

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய எல்ஐசி தென் மண்டல மேலாளா் கோ.முரளிதா்.

Updated On :15 ஆகஸ்ட் 2025, 9:14 pm

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலக வளாகத்தில், தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தேசியக் கொடியேற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-25) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 23.86 லட்சம் பாலிசிதாரா்களுக்கு முதிா்வு மற்றும் இறப்பு இழப்பீடு தொகையாக ரூ.22,265 கோடி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டத்தில் தென் மண்டலத்தில் இதுவரை 19,047 போ் இணைந்துள்ளனா் என்றாா்.