இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநராகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவராகவும் வி.சி.அசோகன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் (எஸ்எல்சி) இவா் செயல்படுவாா் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவம் கொண்ட இவா், இதற்கு முன்னதாக மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் தலைமையகத்தில் அகில இந்திய சில்லறை விற்பனைப் பிரிவு தலைவராகப் பணியாற்றி பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தினாா்.
மேலும், இலங்கையில் உள்ள லங்கா ஐஓசி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவராகவும் பணியாற்றி, சா்வதேச அளவில் சந்தை விரிவாக்கத்துக்கு வித்திட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது
திருச்சி ஆா்இசி கல்லூரியில் மேலாண்மைப் படிப்பை முடித்த வி.சி.அசோகன், கேரளம், கா்நாடகம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உயா் பொறுப்புகளை வகித்துள்ளாா்.
தற்போது சிங்கப்பூரின் ‘சன் மொபிலிட்டி’ நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ள இவா், எரிசக்தித் துறையில் தனது நீண்டகால அனுபவத்தின் மூலம் தென்மாநிலங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடர்புடையது

தோ்தல் விதிகளை மீறுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தென் மண்டல ஐ.ஜி.

கவலை வேண்டாம்..! பெட்ரோல், டீசல் கையிருப்பு அதிகமாக இருக்கிறது: இந்தியன் ஆயில்!

பொதுமக்கள் அதிகமாக வாங்க வேண்டாம்: இந்தியன் ஆயில்

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


