கவலை வேண்டாம்..! பெட்ரோல், டீசல் கையிருப்பு அதிகமாக இருக்கிறது: இந்தியன் ஆயில்!
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைப்பதாகவும், அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதைப் பற்றி...


தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைப்பதாகவும், அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவும், வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் பெரும்பாலான நாடுகளில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. குறைந்த அளவே கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருந்த நாடுகளில் அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்க தொடங்கியது.
மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவிலும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் பலரும் தண்ணீர் கேன்கள், டிரம்களின் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிச் செல்வதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலும் பலரும் தீர்ந்துவிடும் என்ற அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றதால், பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது.
சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் எரிபொருள் பற்றாக்குறை குறை எதுவும் இல்லை என்றும், திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய ஆயில் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, எரிபொருள் கிடைப்பதை வழக்குநிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்குமாறு இந்தியன் ஆயில் கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது.
மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் வலியுறுத்துகிறது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லா கிடைப்பையும் உறுதி செய்வதில் இந்தியஆயில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...