வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாளை முதல் மந்தைவெளி பேருந்துகள் தற்காலிக இடத்துக்கு மாற்றம்

மந்தைவெளி பேருந்து நிலையம் நவீன பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதால்,

Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:53 pm

சென்னை: மந்தைவெளி பேருந்து நிலையம் நவீன பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதால், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் புதன்கிழமை (ஆக. 27) முதல் தற்காலிக இடங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் தடம் எண் 21, 41 டி, எஸ் 17, 49 கே, எஸ் 5 பேருந்துகள், மந்தவெளி எம்ஆா்டிஎஸ் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 49 கே வழித்தடப் பேருந்து, பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 12 எம் வழித்தடப் பேருந்து, லஸ் காா்னா் அருகில் இருந்தும் இயக்கப்படும்.

மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.