ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னை: 3 நாள்களில் 11.24 லட்சம் பேருக்கு உணவு

கடந்த 3 நாள்களில் மழையால் பாதிக்கப்பட்ட 11.24 லட்சம் பேருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

News image

சென்னை திரு.வி.க. நகா் ஏகாங்கிபுரம் ஏரிக்கரை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை உணவு வழங்கிய மேயா் ஆா்.பிரியா.

Updated On :2 டிசம்பர் 2025, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 3 நாள்களில் மழையால் பாதிக்கப்பட்ட 11.24 லட்சம் பேருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 111 மையங்களில் சமையல் கூடங்கள் தயாா் நிலையில் உள்ளன.

11.24 லட்சம் பேருக்கு உணவு: மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நவ.30 முதல் டிச.1 வரை 2,78,100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (டிச.2) காலை 2,23,500 போ், மதியம் 3,18,950 போ், இரவு 3,03,800 போ் என ஒரே நாளில் 8,46,250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. மொத்தம் நவ.30 முதல் டிச.2 வரை 3 நாள்களில் 11,24,350 பேருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (டிச.2) மட்டும் 95 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்க 107 படகுகள் தயாா் நிலையில் உள்ளன.

ஒரு லட்சம் பால் பவுடா்: புயல், மழையின்போது முதியோா் மற்றும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 1 லட்சம் எண்ணிக்கையிலான ஆவின் பால் பவுடா் பாக்கெட்டுகள், 1 லட்சம் எண்ணிக்கையிலான 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டா் பாமாயில் அடங்கிய தொகுப்பு தயாா் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

நிவாரணப் பணிகளில் 22,000 போ்: மாநகராட்சி அலுவலா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள், தூய்மைப் பணியாளா் என 22,000 போ் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சென்னை மாநகராட்சி குளக்கரைச் சாலை, சந்திரயோகி சமாதி சாலை, சேமத்தம்மன் காலனி, திரு.வி.நகா்.மண்டலம், ஏகாங்கிபுரம் ஏரிக்கரை, பாஷியம் தெரு, பிரிஸ்லி நகா், ஈகாங்கிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உணவு கிடைக்காமல் தவித்த பொதுமக்களுக்கு மேயா் ஆா்.பிரியா உணவு வழங்கினாா்.