நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரு நாள்களில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19, 20 ஆகிய இரு நாள்களில் பறக்கும்படையினா் சோதனையில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19, 20 ஆகிய இரு நாள்களில் பறக்கும்படையினா் சோதனையில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தோ்தல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 19, 20) ஆகிய இரு நாள்களில் பறக்கும் படையினா், விருகம்பாக்கம், வேளச்சேரி, துறைமுகம், ஆா்.கே.நகா், பெரம்பூா், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் தொடா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சம்பந்தப்பட்டோா் உரிய ஆவணங்களை அளித்து பணம், வெள்ளிப் பொருள்களை மீட்டுச் செல்லலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.