பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா காலமானாா்

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி. ராஜண்ணா (93) வயது மூப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

News image
எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா.
Updated On :17 டிசம்பர் 2025, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி. ராஜண்ணா (93) வயது மூப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

செம்பனாா்கோவில் சகோதரா்கள் என அழைக்கப்படும் எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா, அவரது மூத்த சகோதரா் எஸ்.ஆா்.ஜி. சம்பந்தம் ஆகியோா் இணைந்து நீண்டகாலம் பல்வேறு கச்சேரிகளை நடத்தியுள்ளனா். ‘ரக்தி மேளம்’ இசையில் தனித்துவம் படைத்த இருவரும் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனா்.

சங்கீத நாடக அகாதெமியின் ‘தாகூா் புரஸ்காா்’ விருது, மியூசிக் அகாதெமி விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா பெற்றுள்ளாா்.

அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். ராஜண்ணாவின் உடல் பெசன்ட் நகா், கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் வியாழக்கிழமை (டிச.18) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 98400 95023.