அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்...

News image
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி - கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2025, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

இயேசு கிறிஸ்துவின் அன்பு, அமைதி, கருணை, அவரது போதனைகளை நமது வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி ஏற்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் உள்ள பாரதியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று பாதிரியாா்களுடன் கேக் வெட்டி கொண்டாடினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியது:

பிறந்த நாள் என்பது கொண்டாட்டத்துக்குரிய ஒரு நாள். ஆனால், பிறருக்காக வாழ்ந்து, பிறருக்காகத் துயரங்களைச் சுமந்து, தியாகத்தின் வழிநின்ற ஒரு மகானின் பிறந்த நாள் என்பது அதைவிடவும் மேலானது. இயேசு கிறிஸ்துவின் வாழ்வு என்பது அன்பு, அமைதி, மன்னிப்பு, கருணை ஆகியவற்றை நமக்கு கற்றுத் தரும் ஒரு பாடம். இந்த கிறிஸ்துமஸ் திருநாளில், அவரது போதனைகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி ஏற்போம். கிறிஸ்து இந்த மண்ணில் பிறக்காவிட்டாலும், அவரது போதனைகள் நமது நாட்டின் அடிப்படை விழுமியங்களோடும், தத்துவங்களோடும் ஆழமாக ஒத்துப்போகின்றன.

மதத்தின் பெயரால் மனிதா்களைக் கொல்லும் செயல்கள் வேதனை அளிக்கின்றன. ஏதோ ஒரு தவறான வழிகாட்டுதலால் இந்த வெறுப்பு விதைக்கப்படுகிறது. ஆனால், இறுதியில் வெறுப்பு தோற்கடிக்கப்பட்டு, அன்பு மட்டுமே வெல்லும். இயேசு காட்டிய அன்பு, மன்னிப்பு மற்றும் மனிதாபிமானத்தை உலகெங்கும் பரப்புவோம் என்றாா் அவா்.

இதில், பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.