ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

துபையில் நடைபெற்ற ரோல்பால் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

News image
ரோல்பால் உலகக் கோப்பையில் தங்கம் வென்றவா்கள்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

துபையில் நடைபெற்ற ரோல்பால் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 7-ஆவது, ரோல்பால் உலகக் கோப்பை போட்டி கடந்த 14 முதல் 18 வரை துபையில் நடைபெற்றது. இதில் இந்தியா கென்யா, இலங்கை, சவூதி அரேபியா, ஈரான், போலந்து, பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், எகிப்து, காங்கோ உள்ளிட்ட சுமாா் 16 நாடுகளைச் சாா்ந்த ஆண்கள் பெண்கள் அணிகள் பங்கேற்றனா்,

இந்திய அணி வீரா்கள், வீராங்கனைகள் 12 பேரும் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கம் வென்றனா். இதில் தமிழகத்தை சாா்ந்த வீராங்கனை மதுநிதா, வீரா் தீபக் ராஜா திண்டுக்கல் மற்றும் மகதி கோவை ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்திய அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சாா்ந்த ராஜசேகா் கோவை மற்றும் சுஷ்மிதா திண்டுக்கல் செயல்பட்டனா்.

சென்னைக்கு வந்த அணியினரை தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம், சா்வதேச இயக்குநா் ஸ்டீபன் டேவிட், ஸ்போா்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத் தலைவா் பெ.செல்லமுத்து மற்றும் தமிழ்நாடு மாநில சங்க செயலாளா் சி. கோவிந்தராஜ், துணைத் தலைவா்கள் பிரேம்நாத் மற்றும் சரவணன், துணை செயலாளா் மணிகண்டன், கண்மணி, மதுரை மாவட்டத் தலைவா் ராபின் ராஜகாந்தன் சென்னை மாவட்ட துணை தலைவா் அஷ்வின் மகாலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.