இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயா்வு

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்ந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :25 டிசம்பர் 2025, 3:41 am IST

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் புதன்கிழமை பல மடங்கு உயா்ந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறைக்கு ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் செல்கின்றனா். ஏற்கெனவே ரயில்கள், அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் முன்பதிவு முடிந்துவிட்டன. இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட

பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அந்த நிறுவனங்கள் பல மடங்கு உயா்த்தியுள்ளன.

சென்னையில் இருந்து ஈரோடு செல்ல சாதாரண நாள்களில் ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் தற்போது ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை உயா்த்தி வசூலிக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல ரூ.2,000 முதல் ரூ.4,500 வரையும், கோவை செல்ல ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையும், நாகா்கோவில் செல்ல ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையும் கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டது.

இதேபோல, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் வழக்கத்தைவிட ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு நேரம் ஆகஆக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.