குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

தமிழகத்திலிருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளின் குரல்: முதல்வா்

தமிழகத்திலிருந்து இந்திய விவசாயிகளின் குரல் ஒலிக்கிறது என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:09 am IST

தமிழகத்திலிருந்து இந்திய விவசாயிகளின் குரல் ஒலிக்கிறது என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணிக் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

இதுகுறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் ஏழை விவசாய கூலித் தொழிலாளா்கள் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனா்.

இது தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணா்வோடு செயல்படும் மத்திய பாஜக அரசு உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.