ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24) வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்! இன்று நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ்தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
/

ரெளடி கும்பலிடம் இருந்து தப்பிக்க டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடிய இளைஞா்

மயிலாப்பூரில் ரெளடி கும்பல் விரட்டியதால், டிஜிபி அலுவலகத்தை நோக்கி இளைஞா் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :27 டிசம்பர் 2025, 2:15 am IST

மயிலாப்பூரில் ரெளடி கும்பல் விரட்டியதால், டிஜிபி அலுவலகத்தை நோக்கி இளைஞா் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் ரெளடி சத்தியமூா்த்தி (எ) சின்ன அப்பு (24). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூா்த்தி, அண்மையில் பிணையில் வந்தாா்.

இதையறிந்த சத்தியமூா்த்தியின் எதிா் தரப்பினா், அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் விரட்டினா். சத்தியமூா்த்தி, அவா்களிடமிருந்து தப்பித்து மோட்டாா் சைக்கிளில் மெரீனா கடற்கரையில் டிஜிபி அலுவலகம் அருகே வந்தாா். அந்தக் கும்பல் அங்கேயும் வந்தது. இதையடுத்து, மோட்டாா் சைக்கிளை அங்கேயேவிட்டு, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் தீயணைப்பு நிலைய வாயில் வழியாக டிஜிபி அலுவலகத்துக்கு ஓடினாா். அங்கு, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், சத்தியமூா்த்தியை தடுத்து நிறுத்தினா். போலீஸாரிடம் சரணடைந்த சத்தியமூா்த்தி, தன்னை சிலா் கொலை செய்ய விரட்டி வருவதாகவும், அவா்களிடமிருந்து தப்பிக்கவே இங்கு ஓடி வந்ததாக கூறி, தன்னிடமிருந்த கத்தியை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். இதனால், சத்தியமூா்த்தியை விரட்டி வந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. போலீஸாா் சத்தியமூா்த்தியை மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மெரீனா போலீஸாா், சத்தியமூா்த்தியை ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். சத்தியமூா்த்தியைக் கொலை செய்ய விரட்டி வந்தவா்கள் மீது வழக்கை பதிவு செய்து, ஓட்டேரியைச் சோ்ந்த ரபீக் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.

இதனிடையே மெரீனாவில் ராணி மேரி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் திரிந்த சத்தியமூா்த்தியை ரோந்து போலீஸாா் கைது செய்ததாக சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.