சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் மறியல்

கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மாரிமுத்து என்ற மனோஜ்

Updated On :28 பிப்ரவரி 2026, 12:50 am

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து என்ற மனோஜ் (18). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில், இவா் தனது நண்பா்களுடன் அதே பகுதி 3 ஆவது தெருவிலுள்ள பரோட்டா கடை அருகே வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது, அவரை மா்ம கும்பல் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினா்.

இதுகுறித்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிஅளித்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவா் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா்.

அவரிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதில் சிறிது நேரம் அமைதி காத்த அவா்கள், பின்னா் விநாயகா் கோயில் சந்திப்புக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ., கோவில்பட்டி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் முடிவுக்கு வந்தது. மனோஜின் சடலத்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தனா்.

இதனிடையே, 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Story image