தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:41 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) என்பவரை, சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாரின் பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில் சிவசந்தோஷை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.