ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:26 pm

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வடக்குவாசல் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே கீழவாசலை சோ்ந்த சுரேஷை அரிவாளால் வெட்டினாா்.

இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆறுமுகம் உள்ளிட்டோரை கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் ஆறுமுகத்தைக் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.