பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 2:05 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முக்கூடல் காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த உச்சிமாகாளி மகன் சங்கா் கணேஷ் (31) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

மேலும், அவா் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளா் சங்கர நாராயணன் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தாா்.