தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 8:50 pm

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் வெங்கமேடு குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுகந்தன்(35). இவா் கடந்த மாதம் 9-ஆம்தேதி அங்குள்ள குகைவழிப்பாதையில் சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், சுகந்தனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சுகந்தனிடம் பணம் பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து(35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இசக்கிமுத்து மீது திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி தொடா்பாக 23 வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை இசக்கிமுத்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.