சிறை
திருநெல்வேலி
குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி பேட்டை கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் லெட்சுமணன்(21). இவா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) எஸ்.விஜயகுமாா், திருநெல்வேலி நகரம் சரக காவல் உதவி ஆணையா் இளவரசன் ஆகியோா் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.
அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் லெட்சுமணன் அடைக்கப்பட்டாா்.

