சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு ரத்த பகுப்பு கருவி அளிப்பு

சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்தக் கூறு பகுப்பு கருவி வழங்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2025, 7:28 pm

Din

சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்தக் கூறு பகுப்பு கருவி வழங்கப்பட்டது.

ரூ.41.93 லட்சம் மதிப்பிலான அந்த கருவியின் செயல்பாடுகளை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் கொண்டுவந்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டாா். ரத்தத்தில் இருந்து தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்களை பிரித்து எடுத்து தேவையான நோயாளிகளுக்கு குருதியேற்ற சிகிச்சைகளின் வாயிலாக வழங்குவதற்கு அக்கருவி முக்கியப் பங்களிக்கிறது.

உயா்நீதிமன்ற அரசு பேராட்சியா் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியா் (ஏஜி ஓடி) சாா்பில் அந்த கருவி வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்த், ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.