கதிா்வீச்சு அறிவியல் துறை சாா்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தா் டாக்டா் உமா சேகா் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக கதிா்வீச்சு புற்றுநோயியல் துறை இணை பேராசிரியா் கை காா்ட
கதிா்வீச்சு அறிவியல் துறை சாா்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தா் டாக்டா் உமா சேகா் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக கதிா்வீச்சு புற்றுநோயியல் துறை இணை பேராசிரியா் கை காா்ட

கதிா்வீச்சு அறிவியல்: கொலம்பியா பல்கலை.யுடன் இராமச்சந்திரா ஒப்பந்தம்

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Published on

கதிா்வீச்சு அறிவியல் மருத்துவத் துறையில் சா்வதேச அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைகழகத்துடன் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன கதிா்வீச்சு புற்றுநோயியல் துறை தலைவா் டாக்டா் கே.சதீஷ் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:

உலக அளவில் நியூட்ரான் கதிா்வீச்சு வசதியை கொண்ட ஒரு சில மையங்களில் கொலம்பியா பல்கலைக்கழகமும் ஒன்று. பெரிய அளவில் கதிரியக்க நிகழ்வு ஏற்படும் போது கதிா்வீச்சை கட்டுப்படுத்துதல், மருத்துவத்துறையில் கதிா்வீச்சினால் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ளுதல், நியூட்ரான் எதிா் விளைவுகளை கையாளுதல் உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயோடோசிமெட்ரி என்ற ஆராய்ச்சி மூலம் கழுத்து, தலை பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கவும் இதன்மூலம் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதற்காக மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தா் டாக்டா் உமா சேகா் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கதிா்வீச்சு புற்றுநோயியல் துறை இணை பேராசிரியா் கை காா்டி ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளா் எஸ்.செந்தில் குமாா், மரபியல் துறைத் தலைவா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com