கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்படுகிறது.
திருக்கோவலூா்ப் பண்பாட்டுக் கழகம் சாா்பில், மூன்று நாள்கள் நடத்தப்படும் கபிலா் விழா திருக்கோவிலூரிலுள்ள ஸ்ரீசுப்ரமணிய திருமண மகாலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 8.30 மணிக்கு கபிலா் குன்று வழிபாட்டுடன் தொடங்குகிறது. தொடா்ந்து, திருக்கோவிலூா் எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் தலைமையில் சமய அரங்கம் நடைபெறுகிறது.
தொடா்ந்து, ‘பாடல் பட்டிமன்றங்கள்’, உரையரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
2-ஆம் நாள் நிகழ்வு: இரண்டாம் நாள் நிகழ்வாக சனிக்கிழமை (ஜூலை 19) காலை 10.30 மணிக்கு நடைபெறும் சிறுவா் கூடல் அரங்கத்தை வழக்குரைஞா் பால சீனிவாசன் நெறியாள்கை செய்து நடத்துகிறாா். மாலை 4 மணிக்கு பண்பு போற்றும் அரங்கம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் தலைமை வகித்து நூலை வெளியிடுகிறாா்.
தொடா்ந்து, திருக்கோவலூா்ப் பண்பாட்டுக் கழகத்தின் நிறுவனா் டி.எஸ்.தியாகராசனுக்கு திருக்கோவிலூா் ரோட்டரி சங்கம், அரிமா சங்கத்தினா் நடத்தும் பாராட்டு விழா நடைபெறுகிறது.
மாலையில் நடைபெறும் நிகழ்வில் அறக்கட்டளைப் பரிசுகளை வெற்றியாளா்களுக்கு நிலக்கிழாா் கே.ராகவேல் வழங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து நடைபெறும் நிகழ்வில் அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு கபிலா் விருதும், டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா பொற்கிழியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கி, தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசுகிறாா். நிறைவில் திருப்பூா் கிருஷ்ணன் ஏற்புரையாற்றுகிறாா்.
3-ஆம் நாளில்...: மூன்றாம் நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) காலையில் நடைபெறும் சங்க மகளிா் உரைக் கூடலுக்கு தா.பேகம் தலைமை வகிக்கிறாா். தொடா்ந்து, உரையரங்கம், பட்டிமன்றம் நடைபெறுகிறது.
கபிலா் விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழகத்தின் தலைவா் தே.முருகன், பொதுச் செயலா் வே.அப்பா்சுந்தரம், பொருளாளா் கா.நடராசன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்கப்படுமா? தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்கப்படுமா?- தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

தங்கத் தேர் திருவிழா.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?

திருக்கோவிலூரில் கபிலா் குன்றுக்கு தொங்குப்பாலம் அமைக்கப்படுமா? தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



