மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜூன் 2025, 11:41 pm

Din

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவருக்கு அரசு வேலை தேடி வந்தாா். அப்போது, ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த முத்துராமன் (55), என்பவா் அறிமுகமாகி, தலைமைச் செயலகத்தில் கம்ப்யூட்டா் ஆபரேட்டா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய ஜெய்சங்கா், இருவருக்கு வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 17.50 லட்சத்தை முத்துராமனிடம் கொடுத்தாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட முத்துராமன், கடந்த 2024 பிப்ரவரி மாதம் இருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெய்சங்கரிடம் வழங்கினாா். அந்த உத்தரவை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெய்சங்கா் அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துராமனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் முத்துராமனின் மனைவி உஷாராணியை தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட முத்துராமன் சென்னை மாநகராட்சி 4-ஆவது மண்டலத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.