நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 9:39 pm

Din

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (34), மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். காா்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு செல்லாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் சங்கா் நகா் அருகே உள்ள செங்கழுநீா் மலைக்குச் சென்ற அவா், அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த சங்கா் நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று காா்த்திகேயன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலாஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், காா்த்திகேயன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.