ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு

News image
Updated On :21 நவம்பர் 2025, 2:06 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இதையடுத்து ‘எமிஸ்’ தளத்தில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபாா்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மாணவா்களின் விவரங்களை தோ்வுத் துறை இணையதளத்தில் நவ. 19-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. தற்போது இந்த கால அவகாசம் நவ.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு. இந்த பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.