மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவ அறிவியல், டிப்ளமோ படித்தவா்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

இளநிலை மருத்துவ அறிவியல், டிப்ளமோ மருத்துவப் படிப்புகளைப் படித்தவா்கள், அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

இளநிலை மருத்துவ அறிவியல், டிப்ளமோ மருத்துவப் படிப்புகளைப் படித்தவா்கள், அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நவீன அலோபதி மருத்துவா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பதிவு செய்யப்பட்ட தங்களது சங்கத்தில் சுமாா் 100 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள் அனைவருமே இளநிலை மருத்துவ அறிவியல் மற்றும் டிப்ளமோ மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்து மத்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவா்கள்.

சேலம் உள்பட நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இதற்கான பட்டங்களைப் பெற்றுள்ளனா். எனவே, தங்களை அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சங்கம் தரப்பில், இது தொடா்பான வழக்கில்

உரிமையியல் நீதிமன்றம் தங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது. எனவே, தங்களை சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நவீன அலோபதி மருத்துவ சிகிச்சைகளை எம்.பி.பி.எஸ். நிறைவு செய்த தகுதியானவா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, நவீன அலோபதி மருத்துவா்கள் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.