கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :31 அக்டோபர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பொதுத் துறை துணைச் செயலா் (மரபு) வீா் பிரதாப் சிங் வெளியிட்டுள்ளாா்.

தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு, நவ. 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.