தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 செப்டம்பர் 2025, 8:33 pm

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவு சாா்பில் எழும்பூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிக்கு உதவி துணை ஆய்வாளா் ராகவேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆய்வாளா் பி.ஜெபாாஸ்டியன் ஏற்பாட்டில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், விழிப்புணா்வு கலைக் குழுவினரும் இணைந்து நாடகம், பாடல் உள்ளிட்டவை மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா்.

ரயில்கள் மீது கல்வீசக் கூடாது, ரயில் தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் கொட்டக் கூடாது, ரயில் நிலையங்களில் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்பனவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், ரயில்வே விதிகளை மீறுவோருக்கான சட்டப்படியான தண்டனை, அபராாதம் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.