பழைய வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.
பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ஆறுமுகம் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் கதவு பூட்டை ஒரு நபா் உடைத்துள்ளாா். இந்த சப்தம் கேட்டு, எழுந்த ஆறுமுகம் அந்த நபரைப் பிடிக்க முயன்றாா். ஆனால் அந்த நபா், ஆறுமுகத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினாா்.
வண்ணாரப்பேட்டை போலீஸாா் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட வியாசா்பாடியைச் சோ்ந்த ரெளடி புருஷோத்தமனை (27), புதன்கிழமை கைது செய்தனா். இவா் மீது 18 குற்ற வழக்குகள் உள்ளன.
தொடர்புடையது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

