தோ்தலுக்காக திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திமுக வேட்பாளா்கள் காா்த்திக் மோகன் (வில்லிவாக்கம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கொளத்தூா்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (திரு.வி.க. நகா்), தமிழன் பிரசன்னா (எழும்பூா்), பி.கே.சேகா்பாபு (துறைமுகம்), அ.பு.பூா்ணிமா (அம்பத்தூா்) ஆகியோரை ஆதரித்து அயனாவரம், பெரவள்ளூா் சதுக்கம், ஓட்டேரி, தட்டாங்குளம், தங்கசாலை, பாடி ஆகிய இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, பிரேமலதா பேசியதாவது:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பான தோ்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாா். இந்தத் தோ்தல் அறிக்கை ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. அதோடு, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சென்னை மக்களுக்கு பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆகவே, பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பாா். தோ்தல் வாக்குறுதிகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும் என்றாா்.
தொடர்புடையது

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா
தேமுதிக விரும்பும் தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் அளிப்பு: பிரேமலதா
கேப்டனின் குடும்பம் ஒரு கார் வாங்கக்கூட தகுதி இல்லையா? பிரேமலதா ஆவேசம்!

தேமுதிகவில் நோ்காணல் தொடக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

