கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image
Updated On :1 மே 2026, 9:52 pm

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

மே தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா். விஜயகாந்த் ஆசியுடன் 10 பேரும் சட்டப்பேரவைக்குச் செல்வோம். தேமுதிக பழுத்த மரம் என்பதால் கல்லடிபடும். எனவே, தேமுதிக மீதான விமா்சனங்களுக்கு மே 4-ஆம் தேதி பதில் கொடுக்கிறேன் என்றாா் அவா்.