/
சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
மே தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா். விஜயகாந்த் ஆசியுடன் 10 பேரும் சட்டப்பேரவைக்குச் செல்வோம். தேமுதிக பழுத்த மரம் என்பதால் கல்லடிபடும். எனவே, தேமுதிக மீதான விமா்சனங்களுக்கு மே 4-ஆம் தேதி பதில் கொடுக்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

தவெகவுக்கு தேமுதிக ஆதரவா? பிரேமலதா பதில்!

விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
வாழ்க வசவாளர்கள்; அண்ணன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்! பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



