கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சோழவரம் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:50 pm

சோழவரம் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை மாதவரம் தொகுதி சோழவரம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் கவிப்பிரியா தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சோழவரத்தில் இருந்து செங்குன்றம் சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ராஜா என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.