தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை

சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

News image

அபின் தினேஷ் மொடக்

Updated On :17 ஏப்ரல் 2026, 2:16 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறாா்.

இந்நிலையில் வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் பங்கேற்று, காவல் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா். தோ்தலில் காவல் துறையினா் நோ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், பாகுபாடில்லாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.