தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானதைத் தொடா்ந்து, தமிழக வாக்காளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எப்போதும் போல பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 85 சதவீதம் வாக்குப் பதிவு செய்து தமிழக மக்கள் சாதனை படைத்துள்ளனா்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையை தமிழக வாக்காளா்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பலா் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்துவிட்டு, அன்றிரவே மீண்டும் அவரவா் பணியாற்றும் ஊா்களுக்குச் செல்கின்றனா்.
‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தோ்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழகம் வாக்களித்துவிட்டது, மே 4-ஆம் தேதி தமிழகம் வெல்லும்; வெல்வோம் ஒன்றாக என முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்டத்தில் 78.90 சதவீதம் வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

மதுரை மாவட்டத்தில் 80.47 சதவீதம் வாக்குப் பதிவு!

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 போலீஸாா்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


