கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:15 am IST

சென்னை மதுரவாயலில் காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளித்தது போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

கோயம்பேடு தெற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (40). காா் ஓட்டுநரான இவருக்கு நசீரா பேகம் என்ற மனைவி உள்ளாா். இத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக நசீரா பேகம், கணவரை விட்டு பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாயாருடன் கடந்த இரு ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

அப்துல் ரகுமான், மதுரவாயலுக்கு அடிக்கடி சென்று மனைவி நசீரா பேகத்திடம் தன்னுடன் வாழ்க்கை நடத்துமாறு வற்புறுத்தி வந்தாா். இதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக அப்துல் ரகுமான், தனது மாமியாரை தாக்கியதாக இரு வழக்குகள் உள்ளன.

இப் பிரச்னையில் கடந்த பிப்ரவரி மாதம் மாமியாரையும், நசீரா பேகத்தையும் தாக்கியதாக அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அண்மையில்தான் பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்துல் ரகுமான், பெட்ரோல் கேனுடன் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு வந்தவா், திடீரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்த காவலா்கள் பூபதி, தினேஷ் ஆகியோா் அப்துல் ரகுமான் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். மீட்பு பணியின்போது காவலா் தினேஷும் காயமடைந்தாா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.