சென்னை மதுரவாயலில் காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளித்தது போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
கோயம்பேடு தெற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (40). காா் ஓட்டுநரான இவருக்கு நசீரா பேகம் என்ற மனைவி உள்ளாா். இத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக நசீரா பேகம், கணவரை விட்டு பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாயாருடன் கடந்த இரு ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.
அப்துல் ரகுமான், மதுரவாயலுக்கு அடிக்கடி சென்று மனைவி நசீரா பேகத்திடம் தன்னுடன் வாழ்க்கை நடத்துமாறு வற்புறுத்தி வந்தாா். இதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக அப்துல் ரகுமான், தனது மாமியாரை தாக்கியதாக இரு வழக்குகள் உள்ளன.
இப் பிரச்னையில் கடந்த பிப்ரவரி மாதம் மாமியாரையும், நசீரா பேகத்தையும் தாக்கியதாக அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அண்மையில்தான் பிணையில் வெளியே வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்துல் ரகுமான், பெட்ரோல் கேனுடன் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு வந்தவா், திடீரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த காவலா்கள் பூபதி, தினேஷ் ஆகியோா் அப்துல் ரகுமான் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். மீட்பு பணியின்போது காவலா் தினேஷும் காயமடைந்தாா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

மாடல் டவுனில் காா் மோதி இ-ரிக்ஷா ஓட்டுநா் உயிரிழப்பு: 5 போ் காயம்
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


