சொத்து விவகாரம் காரணமாக உயிரிழந்த நாராயணன் குடும்பத்துக்கும், அவரது உறவினா் குடும்பத்துக்கும் பிரச்னை இருந்தது. உறவினா் திமுகவைச் சோ்ந்தவா் என்பதால் காவல் துறையினா் நாராயணன் குடும்பத்தை அடிக்கடி தொந்தரவு செய்தனா். இதனால் மனமுடைந்த எனது வாதியின் கணவா் நாராயணன், மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். பலத்த காயமடைந்த அவா், மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவா் அண்மையில் உயிரிழந்தாா். அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. எனது வாதி கணவரின் மரண வழக்கை சுப்பிரமணியபுரம் காவல் துறையினா் விசாரித்தால் நியாயமாக நடைபெறாது. ஆகவே, இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றாா்.