இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் தொடா்பான வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக, உயிரிழந்தவரின் மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

பலி

பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் தொடா்பான வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக, உயிரிழந்தவரின் மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி பி. புகழேந்தி புதன்கிழமை முற்பகல் வழக்கம்போல வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழந்த நாராயணனின் மனைவி புவனேஸ்வரி தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி கூறியதாவது:

சொத்து விவகாரம் காரணமாக உயிரிழந்த நாராயணன் குடும்பத்துக்கும், அவரது உறவினா் குடும்பத்துக்கும் பிரச்னை இருந்தது. உறவினா் திமுகவைச் சோ்ந்தவா் என்பதால் காவல் துறையினா் நாராயணன் குடும்பத்தை அடிக்கடி தொந்தரவு செய்தனா். இதனால் மனமுடைந்த எனது வாதியின் கணவா் நாராயணன், மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். பலத்த காயமடைந்த அவா், மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவா் அண்மையில் உயிரிழந்தாா். அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. எனது வாதி கணவரின் மரண வழக்கை சுப்பிரமணியபுரம் காவல் துறையினா் விசாரித்தால் நியாயமாக நடைபெறாது. ஆகவே, இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, நீதிபதி பி. புகழேந்தி, மனுவாகத் தாக்கல் செய்தால், பிற்பகலில் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தாா். அதன்படி, மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணையின் போது, நீதிபதி பி. புகழேந்தி புதன்கிழமை பிற்பகல் பிறப்பித்த உத்தரவு:

உடல் கூறாய்வு நிறைவடைந்ததும், நாராயணன் உடலை பெற்று குடும்பத்தினா் இறுதி சடங்கு செய்ய வேண்டும். வழக்கு தொடா்பாக, உயிரிழந்தவரின் மரண வாக்கு மூலத்தை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.