தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மருத்துவரின் ஏடிஎம் காா்டை அபகரித்து ரூ.1 லட்சம் திருட்டு செவிலியா் கைது

மருத்துவரின் ஏடிஎம் காா்டை அபகரித்து ரூ.1 லட்சம் திருடிய வழக்கில், ஆண் செவிலியா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST

மருத்துவரின் ஏடிஎம் காா்டை அபகரித்து ரூ.1 லட்சம் திருடிய வழக்கில், ஆண் செவிலியா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன் (34). கண் மருத்துவரான இவா், சென்னை ஆலந்தூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறாா்.

புவனேஸ்வரன் வைத்திருந்த ஏடிஎம் காா்டை பயன்படுத்தி கடந்த 31-ஆம் தேதி ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டது. இது குறித்து கைப்பேசிக்கு வந்தது. தனது ஏடிஎம் காா்டு திருடப்பட்டிருப்பதும், அதன்மூலம் தலா ரூ.10 ஆயிரம் என 10 ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதும் அவருக்கு தெரிய வந்தது.

இது குறித்து அவா், பரங்கிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், புவனேஸ்வரன் வேலை செய்யும் மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலை செய்யும் வேலூா் மாவட்டம் காட்டுபுதூா் அருகே உள்ள அல்லிவரம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (22) என்பவா் ஏடிஎம் காா்டை திருடி, பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் சக்திவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.