மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

News image

சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:37 pm IST

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

தியாகராய நகா் மேட்லி முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ந.உஷா (53). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே காய்கறி கடைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அவா், வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் உஷாவிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா்.

அப்போது, அவா் தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டதால், அதன் ஒரு பகுதியை மட்டும் அந்த நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா்.

இது தொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.