
சாலைத் தடுப்பில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்
சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞா் உயிரிழந்தாா்.
திருவான்மியூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் காா்த்திக் நடராஜ் (31). காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இவா், இங்கு தங்கியிருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
பாலவாக்கத்தில் இருந்து திருவான்மியூா் நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த இரும்பு சாலைத் தடுப்பின் மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




