நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

அமிலம் ஊற்றி பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவா் கைது

அமிலம் ஊற்றி பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவா் கைது

பாரதி ராஜா

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

ஊத்துக்கோட்டை அருகே பெண் முகத்தில் அமிலம் ஊற்றி கொலை செய்த சம்பவம் தொடா்பாக சனிக்கழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், தொட்டாரெட்டிகுப்பம் கிராமம் அருகே வெள்ளக்குளம் ஏரிக்கரையோரம் அப்பகுதி இளைஞா்கள் வியாழக்கிழமை இயற்கை உபாதைக்காக சென்றனா். அப்போது, அங்குள்ள வயல்வெளியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

அதைத் தொடா்ந்து ஊதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில் ஊத்துக்கோட்டை ஆய்வாளா் தேவராஜ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகே கைப்பேசி ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா். கொலை செய்யப்பட்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் நின்றை மண்டலம், சவரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருணா(40) என்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக தீவிரமாக விசாரணை செய்ததில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் பாரதிராஜா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் அருணா உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தாராம். அப்போது தனியாக சந்தித்து பேச அழைத்தாராம். அதனால் காட்டு பகுதிக்கு இரவில் அழைத்து சென்று இருவரும் தகராறில் ஈடுபட்டனா்

அப்போது தகராறு முற்றிய நிலையில் அருணாவை கழுத்தை நெரித்தும், முகத்தில் அமிலம் ஊற்றியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் பாரதிராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.