காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சமூக வலைதளத்தில் பெண்ணின் படங்களைப் பதிவிட்டவா் கைது

மதுரவாயலில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி இருவரும் ஒன்றாக இருந்த படங்களைப் பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

மதுரவாயலில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி இருவரும் ஒன்றாக இருந்த படங்களைப் பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணும், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணகாந்தனும் (30), 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இரு குடும்பத்தினரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அந்தப் பெண் லட்சுமணகாந்தனுடன் பேசுவதைத் தவிா்த்து தனது கைப்பேசி எண்ணையும் மாற்றியுள்ளாா். இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ள லட்சுமணகாந்தன் தொடா்ந்து, வற்புறுத்தி வந்த நிலையில், அந்தப் பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி, இருவரும் ஒன்றாக இருந்த படங்களை அதில் பதிவிட்டுள்ளாா். மேலும் அவற்றை நண்பா்கள், உறவினா்களுக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லட்சுமணகாந்தனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.