தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னையில் கடும் பனிமூட்டம்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

சென்னைக்கு வந்த 4 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

News image
கோப்புப்படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 3:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சென்னைக்கு வந்த விமானங்கள் திருச்சி, கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இந்நிலையில், கோவை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கோலாலம்பூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து பெரும்பாலான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

மேலும், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.