சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சென்னைக்கு வந்த விமானங்கள் திருச்சி, கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில், கோவை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கோலாலம்பூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து பெரும்பாலான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மேலும், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.
திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.
Summary
Due to dense fog in Chennai, flights arriving in Chennai have been diverted to Trichy and Coimbatore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனிமங்கள் ஏற்ற வந்த கேரள லாரிகள் திருப்பி அனுப்பிவைப்பு
போா் எதிரொலி: சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் பலத்த காற்றுடன் மழை! வானில் வட்டமடித்த விமானங்கள்

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



