சென்னை: அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தீ விபத்து தடுப்பு, மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறை பள்ளி - கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு அசோக் நகரில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் ஜி.சத்திய நாராயணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால், பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்கள், காவலாளிகள் பங்கேற்றனா். இதேபோல மாநிலம் முழுவதும் 384 தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சுமாா் 6,000 போ் பங்கேற்ாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

பிளிப்காா்ட் ஊழியா்களுக்கு 105% போனஸ்!

மாம்பாக்கத்தில் தீயணைப்பு நிலையத்துக்கான இடம்: இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


