மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் செக்யூரிட்டி ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் தொடங்கி வைத்தாா்.

News image

அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசும் தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால்.

Updated On :9 பிப்ரவரி 2026, 11:03 pm

சென்னை: அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீ விபத்து தடுப்பு, மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறை பள்ளி - கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு அசோக் நகரில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் ஜி.சத்திய நாராயணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால், பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்கள், காவலாளிகள் பங்கேற்றனா். இதேபோல மாநிலம் முழுவதும் 384 தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சுமாா் 6,000 போ் பங்கேற்ாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.