சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

News image

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 9:49 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை (பிப். 12) நடைபெறவுள்ள நாடுதழுவிய போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

டாஸ்மாக் தொழிலாளா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள சிங்காரவேலரின் நினைவிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி தலைமையில் 9 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து, திமுக தலைவா்களுடன் பேச்சு நடத்தப்படும்.

ஆட்சியில் பங்கு என்ற கொள்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை. பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தத் தோ்தலில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள் உள்பட இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்றாா் அவா்.