குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

News image
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்- கோப்புப்படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை (பிப். 12) நடைபெறவுள்ள நாடுதழுவிய போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

டாஸ்மாக் தொழிலாளா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள சிங்காரவேலரின் நினைவிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி தலைமையில் 9 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து, திமுக தலைவா்களுடன் பேச்சு நடத்தப்படும்.

ஆட்சியில் பங்கு என்ற கொள்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை. பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தத் தோ்தலில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள் உள்பட இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்றாா் அவா்.